தற்போதைய செய்திகள்

திருமங்கலம் அருகே கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

DIN

திருமங்கலம்: மதுரை திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் - திருமங்கம் சாலையில் குறுக்கே வந்த பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், குலதெய்வ கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய தளவாய்ப்புரத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விபத்தில் பலியான 5 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT