கோப்புப் படம் 
இந்தியா

உ.பி.: பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சடலங்களாக மீட்பு

உத்தரப் பிரதேசத்தில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரப் பிரதேசத்தில் பூட்டப்பட்ட வீட்டிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், காஸ்கஞ்ச் பகுதியில் உள்ள வீடு ஒன்று கடந்த மூன்று நாட்களாக பூட்டப்பட்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டனர். உடனே இதுகுறித்து போலீஸாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்துக்கு விரைந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர்.

வீட்டினுள் 5 பேரின் சடலங்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்யவீரின் சடலம் கயிறு ஒன்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. மீதமுள்ள நான்கு சடலங்களும் படுக்கையில் ஒரு போர்வையின் கீழ் காணப்பட்டன. தடயவியல் குழு மற்றும் மோப்ப நாய் படை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில், சத்யவீர் தனது குடும்பத்தின் மற்றவர்களைக் கொன்றுவிட்டு பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. சடலங்களை மீட்டு போலீஸார் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணத்திற்கான காரணம் கண்டறிய வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் காஸ்கஞ்ச் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

In a sensational and tragic incident, a family of five was found dead in Kasganj, UP, with police suspecting murder-suicide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை மதிமுக, பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

SCROLL FOR NEXT