முகப்பு
அடுத்த 2 மணி நேரத்துக்கு இங்கெல்லாம் மழை.
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 14 ஏப்ரல், 2024 at 11:41 AM
அடுத்த 2 மணி நேரத்துக்கு இங்கெல்லாம் மழை.
பகிர்:

தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →