அவிநாசியில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பலியான தம்பதியினர் சிவக்குமார் - லதா 
தற்போதைய செய்திகள்

அவிநாசியில் சாலை விபத்தில் தம்பதியர் பலி

அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியர் சனிக்கிழமை பலியாகினர்.

DIN

அவிநாசி: அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதியர் சனிக்கிழமை பலியாகினர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (48). பனியன் தொழிலாளி.இவரது மனைவி லதா (42). இவர்கள்

இருவரும் அவிநாசி அருகே புதிய திருப்பூரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் அவிநாசி புதுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவிநாசி மங்கலம் சாலை அருகே புறவழிச் சாலையில் வரும் போது, அதே திசையில் கோவை நோக்கி பின்னால் வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT