அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?
இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
தற்போதைய செய்திகள்அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?
இரவு 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று(ஆக. 16) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, கரூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.