தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜார்கண்ட்: காணாமல் போன குழந்தைகள் சடலங்களாக மீட்பு!

மர்மமான முறையில் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை

News image

கோப்புப் படம்

Updated On :16 ஆகஸ்ட் 2024, 12:57 pm

DIN

ஜார்கண்டில் காணாமல்ப் போன குழந்தைகள், குளத்திலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

ஜார்கண்டின் டியோகர் மாவட்டத்தில் ஆக. 15, வியாழக்கிழமையில் 8,9 வயதுடைய மூன்று குழந்தைகள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, அவர்களது பெற்றோர் தேடி வந்துள்ளனர்.

ஆனால், தேடியும் கிடைக்காததால், அவர்கள் சோனாரைதாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகளை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், இன்று (ஆக. 16) அப்பகுதியில் இருந்த ஒரு குளத்தில், காணாமல் போன குழந்தைகள் இறந்த நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, டியோகர் துணைப்பிரிவு காவல் அதிகாரி ரித்விக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.