ஜார்கண்ட்: காணாமல் போன குழந்தைகள் சடலங்களாக மீட்பு!

மர்மமான முறையில் உயிரிழப்பு குறித்து காவல்துறையினர் விசாரணை
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஜார்கண்டில் காணாமல்ப் போன குழந்தைகள், குளத்திலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டனர்.

ஜார்கண்டின் டியோகர் மாவட்டத்தில் ஆக. 15, வியாழக்கிழமையில் 8,9 வயதுடைய மூன்று குழந்தைகள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, அவர்களது பெற்றோர் தேடி வந்துள்ளனர்.

ஆனால், தேடியும் கிடைக்காததால், அவர்கள் சோனாரைதாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகளை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், இன்று (ஆக. 16) அப்பகுதியில் இருந்த ஒரு குளத்தில், காணாமல் போன குழந்தைகள் இறந்த நிலையில், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, டியோகர் துணைப்பிரிவு காவல் அதிகாரி ரித்விக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

கோப்புப் படம்
ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக சதம் விளாசிய 2-வது வீராங்கனை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com