ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக சதம் விளாசிய 2-வது வீராங்கனை!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வீராங்கனை விஷ்மி குணரத்னே சதம் விளாசி அசத்தியுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை வீராங்கனை விஷ்மி குணரத்னே சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இலங்கை மகளிரணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 16) ஒருநாள் தொடர் தொடங்கியது. இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடி வருகிறது. இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
Advertisement
Advertisement
இருப்பினும், அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கனையான விஷ்மி குணரத்னே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 98 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இன்றையப் போட்டியில் சதமடித்ததன் மூலம் இலங்கை அணிக்காக புதிய சாதனை ஒன்றை விஷ்மி குணரத்னே படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக சதம் விளாசிய இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பட்டு ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.