விபத்துக்குள்ளான பேருந்து படம் | எக்ஸ்
தற்போதைய செய்திகள்

நேபாளத்தில் இந்திய பயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து: 14 பேர் பலி!

நேபாளத்தில் இந்தியப் பயணிகளுடன் ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர்.

DIN

நேபாளத்தில் இந்தியர்கள் உள்பட 40 பேர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச பதிவெண் கொண்ட பேருந்து ஒன்று, 40 பயணிகளுடன் நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் உள்ள மர்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்ததாக நேபாள போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து தனாஹூன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீப்குமார் ராயா கூறுகையில், “ ‘UP FT 7623’ என்ற பதிவெண் கொண்ட பேருந்து ஆற்றில் விழுந்து கரையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.

போகாராவில் இருந்து நேபாள தலைநகரான காத்மாண்டுவுக்கு செல்லும் போது பேருந்து விபத்துக்குள்ளானதாக நேபாள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியர்கள் பலர் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த பேருந்து விபத்து சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த யாராவது பேருந்தில் இருந்தார்களா என்பதை பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

இந்த விபத்தில் காயமடைந்த பலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT