வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆக.29-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும்.
நிகழாண்டு திருவிழா ஆக.29-ஆம் தேதி தொடங்கி செப்.8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆக. 29 ஆம் தேதி கொடியேறுவதால், அதற்கு முந்தைய நாள் ஆக. 28 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆக. 28 ஆம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 29 ஆம் தேதி காலை 3.30 மணிக்குச் செல்கிறது. மறுமார்க்கத்தில் ஆக. 30 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு காலை 8.30-க்கு தாம்பரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.