தற்போதைய செய்திகள்

’வாழை’ திரைப்படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்!

’வாழை’ திரைப்படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

DIN

’வாழை’ திரைப்படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இனி எனக்கு வாழைப்பழங்களை பார்க்கும்போதெல்லாம் தலையில் வாழைத்தார்கள் சுமந்து செல்லும் இந்த கதையின் மாந்தர்கள்தான் நினைவுக்கு வருவார்கள்.

வாழைப்பழம் இனி முன்னைப் போல் தித்திக்குமா என்றும் தெரியவில்லை. ஒரு யதார்த்த சினிமா, அதனுள் அழகியல், உணர்வுகள் என எல்லாமே சிறப்பாக உள்ளது. மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்...! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இயக்குநர் பாலா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பாராட்டிய நிலையில் தற்போது இயக்குநர் சங்கரும் படத்தை பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT