வாகனங்களின்றி வெறிச்சோடிய சாலை. 
தற்போதைய செய்திகள்

சேலத்தில் கனமழை: வாகனங்களின்றி வெறிச்சோடிய சாலைகள்!

சேலத்தில் பெய்த கனமழை தொடர்பாக...

DIN

சேலம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இன்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

ஃபென்ஜால் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று(நவ. 30) பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது.

சேலம் மாநகரப் பகுதிகளான ஆட்சியா் அலுவலகம், நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம், குகை, தாதகாப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, ஐந்து சாலை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக தொடா் மழை பெய்து வருகிறது.

சேலம் கருப்பூர் அருகே சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை தெரியாத அளவிற்கு பெய்த கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், சாலை தெரியாத அளவிற்கு பெய்த கனமழை.

நேற்று புறநகர் பகுதிகளான ஓமலூா், எடப்பாடி, ஆத்தூா், மேட்டூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழையாக பெய்யத் தொடங்கிய நிலையில், பின்னா் இடைவிடாமல் தொடர் மழை பெய்தது.

புயல் காரணமாக சேலம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலாட் விடுத்ததை தொடர்ந்து சாலை தெரியாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

SCROLL FOR NEXT