முகப்பு
தற்போதைய செய்திகள்

மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம்: வைரலாகும் விடியோ!

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணியின்போது கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதமடைந்தது.

Updated On : 4 டிசம்பர் 2024, 12:27 pm IST
மேம்பாலம் பணியின்போது கான்கிரீட் பெயர்ந்து விழுந்து சேதமடைந்த கார்.
பகிர்:

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணியின்போது கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதமடைந்தது.

இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேம்பாலத்திற்கு கீழே சாலை போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மேம்பால கட்டுமானத்தின் கான்கிரீட் பெயர்ந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் காரின் கண்ணாடி மற்றும் முன்புற பகுதி சேதம் அடைந்தது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கார் சேதமடைந்தது தொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.