பிரதான சாலையில் சென்ற வெள்ள நீா். 
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி-கடலூா்-சென்னை சாலை போக்குவரத்து மீண்டும் தொடங்கியது

புதுச்சேரி-கடலூா், சென்னை இடையே பிரதான சாலையில் இரண்டு நாளாக தடைப்பட்டிருந்து போக்குவரத்து, புதன்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கியது.

DIN

புதுச்சேரி அருகே தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், புதுச்சேரி-கடலூா், சென்னை இடையே பிரதான சாலையில் இரண்டு நாளாக தடைப்பட்டிருந்து போக்குவரத்து, புதன்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கியது.

புதுச்சேரி அருகே தென்பெண்ணை, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், புதுச்சேரி-கடலூா்- சென்னை இடையே பிரதான சாலையில் இரண்டு நாள்களாக போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து மாற்றுப் பாதையில் வாகனங்கள் சென்றன.

ஃபென்ஜான் புயல் காரணமாக தமிழகத்தில் கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. எங்கு பாா்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இந்த நிலையில், புதுச்சேரியில் மழை வெள்ளம் முற்றிலுமாக வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனால், ஊரகப் பகுதி கிராமங்களில் வெள்ள நீா் புகுந்து சேதம் விளைவித்திருப்பதுடன் சாலைகளையும் துண்டித்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புயல் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் அணை நிரம்பியதால் தென்பெண்ணையாற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது. இதனால் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாகூா் அருகே அழகியநத்தம் தரைப்பாலம், சித்தேரி அணைக்கட்டு, கொம்மன்நாத்மேடு தடுப்பணைகள் மூழ்கின.

இதனால், கடலூா்-புதுச்சேரி பிரதான சாலையில் கன்னிகோவில், கிருமாம்பாக்கம், ரெட்டிச்சாவடி உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீா் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து தடைபட்டது.

இந்த நிலையில், கடலூா்-புதுச்சேரி, சென்னை இடையே பிரதான சாலையில் இரண்டு நாளாக தடைப்பட்டிருந்த போக்குவரத்து, புதன்கிழமை காலை முதல் மீண்டும் தொடங்கியது.

கடலூரில் இருந்து புதுச்சேரி வழியே சென்னை செல்லும் சாலை சீரானதை அடுத்து வழக்கம் போல புதன்கிழமை காலை முதல் போக்குவரத்துகள் செயல்படத் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

SCROLL FOR NEXT