கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

புர்கினோ ஃபசோவின் ராணுவ அரசினால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர்!

புர்கினோ ஃபசோவின் ராணுவ அரசினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதைப் பற்றி..

DIN

புர்கினோ ஃபசோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபசோவின் ராணுவ அரசாங்கத்தினால் அந்நாட்டின் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் தரோரின் ராணுவ அரசினால் முன்னாள் பிரதமர் டம்பேலா தலைமையிலான அரசாங்கம் கலைக்கபட்டதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரிம்டல்பா ஜீன் இம்மானுவேல் அவ்டிராகோ நியமிக்கப்பட்டார்.

இதையும் படிக்க: சிரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவு: கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!

இதற்கு முன்னர் அவ்டிராகோ, கலைக்கப்பட்ட டம்பேலா அரசின் தகவல் தொடர்பு அமைச்சராகவும், அரசு செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றினார்.

இதுவரை டம்பேலா அரசு கலைக்கப்பட்டதிற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் தரோர் தலைமையிலான ராணுவம் அரசாங்கத்தை கைப்பற்றியவுடன் டம்பேலா பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

3வது டி20: இந்தியாவுக்கு 187 ரன்கள் இலக்கு!

மனம் பேசும் மொழி... மலர்!

காதலின் சாரல் மொழி... சத்யா தேவராஜன்!

SCROLL FOR NEXT