FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

அல்லு அர்ஜுனுக்கு நடிகர் நானி ஆதரவு

பாலிவுட் நடிகர் வருண் தவானைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டோலிவுட் நடிகர் நானியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Updated On : 13 டிசம்பர் 2024, 7:22 pm IST
நடிகர் நானி. - கோப்புப்படம்.
பகிர்:

பாலிவுட் நடிகர் வருண் தவானைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டோலிவுட் நடிகர் நானியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சினிமா தொடர்புடையவற்றில் அரசு அதிகாரிகளும், ஊடகங்களும் காட்டும் ஆர்வத்தை சாதாரண மக்களின் மீதும் காட்ட வேண்டும் . நாம் நல்ல சமுதாயத்தில் வாழ்ந்திருக்கலாம். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். அதிலிருந்து நாம் அனைவரும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருப்பதற்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் அனைவரும் தவறு செய்பவர்கள்தான். அதற்கு ஒருவர் மட்டும் பொறுப்பாக முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் கண்டுகளிக்கச் சென்ற கவிதா (35) அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

எல்லா பழிகளையும் ஒருவர் மீது சுமத்துவது வருத்தமளிக்கிறது: நடிகை ராஷ்மிகா

மேலும், கூட்ட நெரிசலில் சிக்கிய அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், அல்லு அர்ஜுன் மீது 105, 118 (1) என்ற பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், அவரை வெள்ளிக்கிழமை (டிச. 13) கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அல்லு அர்ஜுன் தரப்பில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதராக ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பாலிவுட் நடிகர் வருண் தவான், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒருவரை மட்டுமே பழி சுமத்த முடியாது: அல்லு அர்ஜுன் வழக்கு பற்றி வருண் தவான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments