தற்போதைய செய்திகள்

புயல் சின்னத்தால் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை!

காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை.

DIN

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் பலத்த மழைக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடும் தமிழ்நாடு வெதர்மென் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் மழை தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

நகர் முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது. அடுத்து, மிதமான மழைமேகக் கூட்டங்கள் நகருக்குள் நுழையத் தொடங்கும். இதனால் லேசான மழையே பெய்யும்.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளை(டிச. 19) காலை/மதியம் தமிழக கடற்கரையில் இருந்து நகரும்போது மழை குறையத் தொடங்கும்.

இந்த காற்ற்ழுத்த தாழ்வுப் பகுதியால் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 10 மணி வரை) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முடிவெட்டும் கடவுளான முடிசூடும் பெருமாள்! டிஎன்பிஎஸ்சி-யின் குளறுபடி!

பைக் மீது மணல் லாரி மோதல்: மூதாட்டி உள்பட இருவர் பலி

அசத்தும் லோகா! ஹிருதயப்பூர்வம், ஓடும் குதிரை சாடும் குதிரை நிலவரம் என்ன?

லீக்ஸ் கோப்பை இறுதிப் போட்டி: மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி தோல்வி!

தமிழ்நாடு அனைத்துத் துறையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT