முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!

ஒடிசாவில் பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்ததைப் பற்றி..

Updated On : 20 டிசம்பர் 2024, 8:10 pm IST
தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர்.
பகிர்:

ஒடிசா மாநிலம் கெந்தரப்பரா மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கெந்தரப்பரா மாவட்டத்தின் ஃபகிராபாத் எனும் கிராமத்திலுள்ள ராமசந்திரா நோடல் உயர்நிலை அரசுப் பள்ளியின் திடலில் நேற்று ஆண்டு விழா நடைப்பெற்றது. அப்போது அருகிலிருந்த மரத்திலிருந்து தேனீக்கூடு ஒன்று கிழே விழுந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அதிலிருந்த தேனீக்கள் கூட்டமாக அருகில் நடைப்பெற்று கொண்டிருந்த பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை விரட்டி கொட்டத் துவங்கின.

Advertisement

Advertisement

இதில், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் தப்பித்து ஒடி வகுப்பறைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இருப்பினும், தேனீக்கள் அவர்களை விரட்டிச் சென்று மாணவர்களை பல இடங்களில் கொட்டியுள்ளது.

இதில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அப்பள்ளியின் ஆசிரியர்கள் தேனீ கொட்டிய மாணவர்களை மீட்டு அருகிலிருந்த சுகாதார மையத்தில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் ஆண்டு விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த குறித்து தகவல் அறிந்து ஒடிசா மாநில கல்வித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் மாணவர்களை காண விரைந்தனர்.

இந்நிலையில், படுகாயமடைந்த மாணவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் பயிலும் இடத்தை முறையாக பராமரிக்காமல் இருப்பதினால் இதுப்போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments