சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி!
மெக்ஸிகோ நாட்டில் சிறிய ரக விமானம் விபத்தில் 7 பேர் பலியானதைப் பற்றி...
மெக்ஸிகோவின் காட்டுப் பகுதியில் விழுந்து சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.
அந்நாட்டின் மைக்கோகன் மாநிலத்தின் லா பரோடாவிலிருந்து நேற்று (டிச.22) புறப்பட்ட செஸ்னா 207 எனும் சிறிய ரக விமானம், மேற்கு மெகிஸிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தின் காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து ஜலிஸ்கோ பொது பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, விபத்து நிகழ்ந்தது அடர்ந்த காட்டுப்பகுதி என்பதினால் அங்கு சென்றடைவது மிகுந்த சிரமமாக உள்ளதாகவும், அந்த விபத்தினால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு, ஆபத்து எதுவும் தொடராமல் இருக்க அவ்விடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்துனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கடையின் மீது விழுந்த விமானம்! 9 பேர் பலி!
இந்த விபத்தில் மொத்தம் 7 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், அவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்த பின்னர் பலியானவர்களின் உடல்களை அங்கிருந்து அகற்றப்படவுள்ளது.
அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் மேலும் யாராவது இந்த விபத்தினால் பலியாகியுள்ளார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஜலிஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.