முகப்பு
தற்போதைய செய்திகள்

பாலத்திலிருந்து 3.6 கிலோ வெடி பொருள் கைப்பற்றல்!

மணிப்பூரில் பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடி பொருளை பாதுகாப்புத் துறை கைப்பற்றியதைப் பற்றி...

Updated On : 25 டிசம்பர் 2024, 12:11 pm IST
மணிப்பூரில் 3.6 கிலோ வெடி பொருள் கைப்பற்றல்.
பகிர்:

மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடி பொருளும் ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

சூராசந்திரப்பூர் மாவட்டம் லெய்சாங் கிராமத்தில் இந்தியப் பாதுகாப்புப் படைகளான அசாம் ரைஃபில்ஸ் மற்றும் மணிப்பூர் மாநில காவல்துறை இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இம்பால்-சூராசந்திரப்பூர் வழியிலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடிபொருளும், அதனை வெடிக்க செய்யக்கூடிய டெடோனேட்டர்களும் மற்றும் சில சாதனங்களும் மீட்கப்பட்டன.

Advertisement

Advertisement

இதுகுறித்து இன்று (டிச.25) ஸ்பியர் கார்ப்ஸ், தங்களது எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது, தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் லெய்சாங் கிராமத்தில் சோதனை மேற்கொண்டதாகவும், அதில் கைப்பற்றப்பட்ட 3.6 கிலோ அளவிலான வெடிபொருளை செயல் இழக்கச் செய்ய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மணிப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (டிச.24) சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் மோல்ஜோல் கிராமத்தில் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட சோதனையில் M16 ரக துப்பாக்கி ஒன்றும், 4 நாட்டுத் துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments