சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்ற முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர்.  
தற்போதைய செய்திகள்

பாஜக போராட்டம்: தமிழிசை, பாஜக நிர்வாகிகள் கைது

வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதால் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்யதனர்.

DIN

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்த முயன்றதால் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்யதனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழக பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில் அனுமத இன்றி போராட்டம் நடத்த முயன்றதால் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜக மாநில துணைத்தலைவர் கருணாகராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனை கண்டித்து போராட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும், சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இந்த பாலியல் வன்கொண்டுமையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கூடிய ஆர்வத்தை இதுபோன்ற குற்றங்களை நடைபெறுவதை தடுப்பதற்கு காவல்துறையினர் அக்கறை காட்டவில்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT