கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி. 
தற்போதைய செய்திகள்

அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது ஏன்?: அமைச்சர் செந்தல்பாலாஜி விளக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை வேலை இருக்கா இல்லையா என நகைப்புடன் பதில் அளித்துவிட்டு புறப்பட்டார்.

DIN

கோவையில் பல்வேறு புதிய திட்ட பணிகளையும் முடிவற்ற பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் புதிய பொது விநியோக கடையை தொடங்கி வைத்த அவர் பொங்கல் தொகுப்பை மக்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

கோவை மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை ரூ.30 கோடியே 93 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் 860 கிலோமீட்டர் சாலைகள் ரூ.415 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகளாக முடிக்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட சாலைகளை தார் சாலைகளாக மாற்ற கூடுதலாக ரூ. 200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு,ரூ.100 கோடி டெண்டர் விடவும், மீதம்

ரூ.100 கோடி மதிப்பில் சாலைகள் தேர்வு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கவும் தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.

கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு கோவை மாநகராட்சி வரலாற்றில் மூன்றரை ஆண்டுகளில் இவ்வளவு நிதிகளில் சாலைகள் அமைத்தது இதுவே முதல் முறை எனவும் கூறினார்.

அவிநாசி மேம்பாலம் நீட்டிப்பு குறித்து பேசிய செந்தல்பாலாஜி, வணிகர்களின் கோரிக்கையை ஏற்று அவினாசி சாலை மேம்பாலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

சாலை பணிகள், மேம்பாலம் பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தெரு விளக்குகள் அமைப்பது என முழுமையாக பணிகளை செய்து வருகிறோம் எனவும் எதிர்க்கட்சி பேரவை உறுப்பினர் என்று பார்க்காமல் நிறைவேற்றி வருகிறோம்.

அரசு நிகழ்ச்சியில் பாஜக பேரைவ உறுப்பினர் கோரிக்கை வைப்பதற்கு முன்பே, முதல்வர் அந்த திட்டங்களை அறிவித்து நிதியை ஒதுக்கினார். கோவை மாவட்டத்தின் மீது முதல்வர் சிறப்பு கவனம் செலுத்து வருகிறார் என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் திட்ட அறிவிப்புகளாக பார்க்காமல், பணிகள் தொடர்பாக முதல்வர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,

ஈரோடு வந்தபோது விமான நிலையத்திலேயே மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரை அழைத்து பணிகள் தொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தி பணிகளை விரைவுபடுத்தி உள்ளார் எனவும் கூறினார்.

மேலும் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சாட்டையால் தனக்கு தானே அடித்துக் கொண்டது குறித்து செய்தியாளர்களின் கேள்வி, இன்று ஞாயிற்றுக்கிழமை வேலை இருக்கா இல்லையா என நகைப்புடன் பதில் அளித்துவிட்டு புறப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT