பூத்துக் குலுங்கும் மலா்ச் செடிகள். 
தற்போதைய செய்திகள்

சென்னையில் மலர்க் கண்காட்சி: முதல்வர் திறந்து வைக்கிறார்!

சென்னையில் 4-வது மலர்க் கண்காட்சி தொடக்கம்.

DIN

சென்னையில் 4வது ஆண்டாக நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள்(ஜன. 2) தொடக்கி வைக்கிறார்.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது.

சென்னை செம்மொழி பூங்காவில் தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை சாா்பில், கடந்த 3 ஆண்டுகளாக மலர்க் கண்காட்சி தொடா்ந்து நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்தாண்டும் நடைபெறுகிறது.

இதையொட்டி, சென்னை கண்காட்சிக்குத் தேவையான மலா்ச் செடிகளை உற்பத்தி செய்யும் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்தக் கண்காட்சிக்கு நீலகிரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மலா்ச் செடிகள் உற்பத்தி செய்து, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி, ஜனவரி 2 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை இந்த மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது.

காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் மக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு ரூ. 150, சிறியவர்களுக்கு ரூ. 75-ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன் மலர்கள் கொண்டு வரப்பட்டு மலர்க் கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT