சென்னை மெரீனா கடற்கரையில் அலங்கரிக்கப்பட்டுள்ள வண்ண விளக்குகள். 
தற்போதைய செய்திகள்

புத்தாண்டு: மெரீனா கடற்கரை மூடல், ஈசிஆரில் போக்குவரத்து நெரிசல்

புத்தாண்டையொட்டி சென்னை மெரீனா கடற்கரை மூடல்.

DIN

புத்தாண்டையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ளது.

புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக வாகனங்களில் மக்கள் ஈசிஆரை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரை மூடப்பட்டுள்ள நிலையில், மெரீனா கடற்கரை உள்புறச் சாலையில் வாகனங்கள் நுழையாமல் தடுக்கும் வகையில், அனைத்து வழிகளிலும் சாலைத் தடுப்புகள்கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரை உள்புறச் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும், கலங்கரை விளக்கத்துக்கு பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை சந்திப்பு அருகில் மணிமண்டபத்தை வண்ண பூக்களால் அலங்கரித்துள்ளனர். கண்ணை கவரும் வகையில் அழகிய வண்ணங்களோடு இருப்பதால் பொதுமக்கள் நின்றபடி சுயபடம் எடுத்து வருகின்றனர்.

இன்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண்குமார் இருவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT