தற்போதைய செய்திகள்

அவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்: ஆளுநர் மாளிகை விளக்கம்

DIN

ஆளுநர் மாளிகை தனது விளக்கத்தில், கடந்த 9ஆம் தேதி அளித்த ஆளுநர் உரைக்கும், இன்றைய உரைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆளுநர் உரையில் அரசின் சாதனைகள் இருக்கலாம், அரசியல் இருக்கக் கூடாது. சட்டப்பேரவையில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும் என ஏற்கெனவே முதல்வருக்கும், பேரவைத் தலைவருக்கும் ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார்.

தேசிய கீதத்திற்கு ஆளுநர் ஆர்என்ரவி மரியாதை செலுத்த இருந்த நிலையில், வழக்கமான நடைமுறையை பின்பற்றாமல் ஆளுநரை பேரவைத் தலைவர் அப்பாவு விமர்சிக்க தொடங்கினார். பேரவைத் தலைவரின் செயல்பாடு அவரது பதவியின் கண்ணியத்தையும் அவையின் மாண்பையும் குறைத்துவிட்டது. அதனால் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார். இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநா் ஆா்.என்.ரவியின் உரையுடன் இன்று (பிப்.12) காலை 10 மணியளவில் தொடங்கியது. எனினும், ஆளுநர் தனது உரையை முழுவதுமாக படிக்காமல் 2 நிமிடங்களில் முடித்தார். சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியதும் ஆரம்பத்தில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்தார். “தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டுள்ளது.

அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது“ என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரத் என்று தனது உரையை ஆளுநர் முடித்தார். இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு ஆளுநருக்கு தயாரித்த கொடுத்த கொள்கை உரையை, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தமிழில் முழுவதுமாக வாசித்தார். இதையடுத்து, தமிழக ஆளுநர் வாசிக்காத உரையை சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிட அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைல் கூட்டம் நிறைவடைவதற்கு முன்னதாகவே புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து, அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

எங்களது திட்டங்களை தடுத்து நிறுத்திய ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன்: சிஎஸ்கே பயிற்சியாளர்

SCROLL FOR NEXT