புதிய குடும்ப அட்டைகள் விண்ணப்பித்தவர்கள் கவனத்துக்கு...
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள்.
புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிா் உரிமைத் தொகை திட்டமானது, குடும்ப அட்டைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருவதாலும், தோ்தல் நடத்தை விதிமுறைகளாலும், புதிய குடும்ப அட்டை வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தது.
புதிய குடும்ப அட்டை கோரி 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் முதல் புதிய குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.