காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதாகத் தகவல்.
Updated On : 25 ஜூலை, 2024 at 1:55 PM
காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக அரசு விடுத்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அணையில் இருந்து 50,000 முதல் 80,000 கன அடி நீர் திறக்க வாய்ப்புள்ளதால், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
Advertisement
Updated On : 25 ஜூலை, 2024 at 2:21 PM
கடந்த 10 நாள்களாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.