தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்.  
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவர்கள்!

தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை (ஜூன் 15) முதல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்பிடித் தடைக்காலம் நிறைவு பெற்றதையடுத்து சனிக்கிழமை (ஜூன் 15) முதல் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் ஆகியவற்றிற்கு மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் சனிக்கிழமை விசைப்படகில் கடலுக்கு சென்ற மீனவா்கள்.

அதன்படி, நிகழாண்டு மீன்பிடித் தடைக்காலத்தில், மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், வேம்பாா், தருவைகுளம் ஆகிய இடங்களில் உள்ள மொத்தம் 551 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நாள்களில் மீனவா்கள் தங்கள் படகுகளை சீரமைத்தல், வலைகளை சரி செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், மீன்பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 14) நிறைவடைந்ததையடுத்து, சனிக்கிழமை (ஜூன் 15) அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குச் சென்றனர். தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளதால், அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT