விக்கிரவாண்டி இடைத் தோ்தல்: பாமக வேட்பாளர் சி.அன்புமணி
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலுக்கான பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலுக்கான பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏப்.6-ஆம் தேதி திடீரென மறைந்ததை தொடா்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், இடைத்தோ்தல் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்படி, ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக சார்பாக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி போட்டியிடுகிறாா் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.