விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தோ்தலுக்கான பாமக வேட்பாளராக சி.அன்புமணி போட்டியிடுவதாக அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏப்.6-ஆம் தேதி திடீரென மறைந்ததை தொடா்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதிக்கான இடைத் தோ்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில், இடைத்தோ்தல் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாமக சார்பாக கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி போட்டியிடுகிறாா் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.