மதுரை-பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான சோதனை ஓட்டம் இன்று(ஜூன் 17) நடைபெற்றது.
தெற்கு ரயில்வேயில் சென்னை-மைசூா், சென்னை-கோவை, சென்னை-திருநெல்வேலி, திருவனந்தபுரம்-காசா்கோடு, சென்னை-விஜயவாடா, கோவை-பெங்களூா் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கோயில் நகரமான மதுரையில் இருந்து தொழில்நுட்ப நகரான பெங்களூருக்கு வந்தே பாரத் ரயிலை இயக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, மதுரை-பெங்களூா் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமா் மோடி விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ரயில் திண்டுக்கல், கரூா், சேலம், தருமபுரி, ஒசூா் வழியாக இயக்கப்படவுள்ளது.
இந்நிலையில், மதுரை-பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கான சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.