தங்கதமிழ்செல்வன் சகோதரர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
தங்கதமிழ்செல்வன் சகோதரர் தங்கபன்னீர்செல்வம் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேனி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தங்கதமிழ்செல்வன் சகோதரர் தங்கபன்னீர்செல்வம் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வா் வெளியிட்ட இரங்கல் செய்தி:
தேனி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தங்கதமிழ்செல்வன் சகோதரர் தங்கபன்னீர்செல்வம் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தியறிந்து பெரிதும் வருந்தினேன்.
அன்புச் சகோதரரின் பிரிவால் வாடும் தங்கதமிழ்செல்வன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.