கூடலூர்: கூடலூரில் வெள்ளிக்கிழமை காலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காட்டு யானை ஒன்று அடித்துச் செல்லப்பட்டதை பார்த்தவர்கள் பதற்றத்துடன் கூச்சலிட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓவேலி மலைத் தொடரிலிருந்து அதிகளவு நீர் வருவதால் பாண்டியாற்றில் அதிகயளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
இந்த நிலையில், ஓவேலி பகுதியிலிருந்து வந்த யானைக் கூட்டம் ஆற்றில் தண்ணீர் குடித்து ஆற்றை கடக்க முயன்றபோது ஒறு யானை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. யானை போராடி நீண்ட தூரத்திற்கு சென்ற பிறகு அக்கரைக்குச் சென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.