லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் (கோப்பு படம்) 
தற்போதைய செய்திகள்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: மின் உற்பத்தி தொடக்கம்

DIN

கம்பம்:முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு வெள்ளிக்கிழமை அதிகரிக்கப்பட்டதால் லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் 5 இல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் இரச்சல் பாலம் வழியாக குடிநீர் மற்றும் கால்நடைகளுக்களின் தேவைக்காக 105 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 

தற்போது வெள்ளிக்கிழமை அணையிலிருந்து வினாடிக்கு 1,267 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மின் உற்பத்தி தொடக்கம்

கடந்த மார்ச் 5 இல் அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது வெள்ளிக்கிழமை தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. இரண்டாவது மின்னாக்கியில் 32 மெகாவாட் மின்சாரமும், மூன்று, நான்காவது மின்னாக்கிகளில் தலா 40 மெகாவாட் என மொத்தம் 112 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT