தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் அதிகாலையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடந்த சில நாள்களாக அனல் காற்று வீசியது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென பலத்த மழை பெய்ததால் சாலை ஒரங்களில் தேங்கியிருக்கும் தண்ணீர்.

இந்த நிலையில்,கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாநகரப் பகுதியில், வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலகைப் பிணைக்கும் தொலைத் தொடா்பு!

நல்லவே எண்ணல் வேண்டும்

கோயிலுக்கு சுற்றுச்சுவா் கட்டும் பணி தடுப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நாகா்கோவிலில் குளத்தில் மூழ்கி ஓட்டுநா் பலி

எழுதப் படிக்கத் தெரியாதவா்கள் கணக்கெடுப்பு

SCROLL FOR NEXT