முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிர்கள்!

வானத்தைப் போல தொடரின் நாயகி தேப்ஜனி மொடாக் 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Updated On : 26 மார்ச் 2024, 4:05 pm IST
வெற்றி வசந்த் - தேப்ஜனி மொடாக் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரின் நாயகன் வெற்றி வசந்த் 30வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதேபோன்று வானத்தைப் போல தொடரின் நாயகி தேப்ஜனி மொடாக் 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

சின்னத்திரையைச் சேர்ந்த இரு பிரபலங்கள் இன்று ஒரேநாளில் பிறந்தநாள் கொண்டாடுவதால், சின்னத்திரை ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் வெற்றி வசந்த். இவர் யூடியூபில் பல தொடர்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

வெற்றி வசந்த்

சிறகடிக்க ஆசை தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதையும் வசந்த் வென்றுள்ளார். இவர் தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சிறகடிக்க ஆசை தொடரின் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி வெற்றியின் பிறந்தநாளை குழுவினர் கொண்டாடினர்.

இதேபோன்று நடிகை தேப்ஜனி மொடாக் தனது 28வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவர் தற்போது வானத்தைப் போல தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தேப்ஜனி மொடாக்

தெலுங்கில் நாக்கவுட் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, வங்கமொழித் தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். வங்கமொழி ஆன்மிகத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தார்.

2019ம் ஆண்டு ராசாத்தி தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments