மாணவர் சின்னத்துரை Dotcom
தற்போதைய செய்திகள்

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

நான்குனேரி தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை +2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளார்.

DIN

நான்குனேரியில் கடந்த ஆண்டு சக மாணவர்களால் தாக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை +2 பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் வாங்கி அசத்தியுள்ளார்.

நெல்லை மாவட்டம், நான்குனேரியில் கடந்த ஆண்டு ஆக. 9-ஆம் தேதி இரவு காழ்ப்புணா்ச்சி காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் சின்னத்துரையும் அவரது சகோதரி சந்திரசெல்வியும் சக மாணவா்களால் தாக்கப்பட்டனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 5 மாணவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட மாணவரை உள்நோக்கத்தோடு கேலி, கிண்டல் செய்ததுடன் தலைமை ஆசிரியரிடம் புகாா் அளித்ததற்காக ஆயுதங்களால் தாக்கியுள்ளனா்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னத்துரை தற்போது அதிலிருந்து மீண்டு வந்து நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளது பலராலும் பாரட்டப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு X தளத்தில் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சைபர் தாக்குதல் எதிரொலி: ஜப்பானில் ‘பீர்’ தட்டுப்பாடு!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்திய படங்களைத் திரையிட மறுக்கும் கனடாவின் திரையரங்குகள்! ஏன்?

பால்வளத் துறையில் 70% வளர்ச்சி: அமித் ஷா பாராட்டு!

காந்தாரா படம் பார்க்கும்போது சாமியாடிய பெண்..! வைரல் விடியோ!

SCROLL FOR NEXT