முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

Updated On : 19 மே, 2024 at 8:59 AM
பகிர்:

தோனியின் 110 மீட்டர் சிக்சர் தான் ஆர்சிபி வெற்றியை எளிதாக்கியது என்று அந்த அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, தோனி 110 மீட்டர் தூரத்தில் மைதானத்திற்கு வெளியே அடித்த அந்த சிக்ஸர்தான் நேற்றைய போட்டியில் சிறப்பான தருணம். அதனால், எங்களுக்கு புதிய பந்து கிடைத்தது. அது எங்களுக்கு உதவியது என்றார்.

பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 68-ஆவது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

வாழ்வா-சாவா என்ற நிலையில் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகுந்த முக்கியமானதாக அமைந்தது. சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவா்களுக்குள்ளே வென்றால் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.

டாஸ் வென்ற சென்னை பௌலிங்கை தோ்வு செய்ய பெங்களூரு அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 218/5 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் சென்னை தரப்பில் சா்துல் தாகுா் 2-61 விக்கெட்டுகளை சாய்த்தாா். 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவா்களில் 191/7 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

யஷ் தயாள் வீசிய 20ஆவது ஓவரில் முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. பௌலிங்கில் பெங்களூரு தரப்பில் யாஷ் தயால் 2-42 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் சென்னை அதிா்ச்சியுடன் வெளியேறியது.

முழு கட்டுரையைப் படிக்க →