கோப்புப்படம்  
தற்போதைய செய்திகள்

பட்டாசு விபத்துகளால் 304 பேர் பாதிப்பு: தீயணைப்புத் துறை

தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் சிறிய பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

DIN

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் சிறிய பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளித் திருநாளான வியாழக்கிழமை(அக்.31) மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட சிறிய பட்டாசு விபத்துகளால் 304 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பட்டாசு இல்லாமல் பிற காரணங்களால் 31 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

பட்டாசு விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டறைக்கு பொதுமக்களிடம் இருந்து 128 அழைப்புகள் வந்துள்ளன. பட்டாசு வெடித்ததில் தீ விபத்து தொடர்பாக 97 அழைப்புகள் வந்துள்ளன என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட 17 விபத்துகள் நிகழ்ந்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT