அரசு தேர்வுகள் இயக்ககம் 
தற்போதைய செய்திகள்

திறனாய்வுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவ,மாணவிகளின் திறனை ஊக்குவிப்பதற்காக முதல்வரின் திறனாய்வுத் தோ்வு

DIN

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் திறனை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை(நவ.6) வெளியிடப்பட உள்ளது.

தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவ,மாணவிகளின் திறனை ஊக்குவிப்பதற்காக முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தோ்வின் மூலம் 500 மாணவர்கள், 500 மாணவிகள் என ஆயிரம் போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக இளநிலை பட்டப் படிப்பு வரை மாதம் ரூ.1,000 வழங்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான முதல்வா் திறனாய்வுத் தோ்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் மொத்தம் 1 லட்சத்து 03,756 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் திறனை கண்டறிவதற்காக முதல்வரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை(நவ.6) ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT