தற்போதைய செய்திகள்

மார்ட்டின் லாட்டரி தொடர்புடைய இடங்களில் ரூ. 12.41 கோடி பறிமுதல்!

ரூ. 6.42 கோடி நிலை வைப்புத்தொகையும் முடக்கம்.

DIN

மார்ட்டின் லாட்டரி நிறுவனம் தொடர்புடைய 22 இடங்களில் இருந்து ரூ. 12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட விதிகளின் கீழ் சாண்டியாகோ மார்ட்டினுக்கு தொடர்புடைய தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மேகாலயா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனைபோது, ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், ரூ. 12.41 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ. 6.42 கோடி நிலை வைப்புத்தொகையும் முடக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் அரசின் லாட்டரி சீட்டுகளை தொழிலதிபா் மாா்ட்டின் அச்சடித்து விற்பனை செய்ததில் பல கோடி ரூபாயை முறைகேடாக ஈட்டியதாகவும், அதை நாடு முழுவதும் சுமாா் 40 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரிகாரிகள் தெரிவித்தனர்.

கோவையில் லாட்டரி அதிபா் மாா்ட்டின் தொடா்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறையினா் நடத்தி வந்த 3 நாள் சோதனை சனிக்கிழமை நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் சென்ற காரை வழிமறித்து தாக்குதல்! அன்புமணி காரணமா?

பிகார் தேர்தலில் ராகுலின் தாக்கம் பெரிய பூஜ்ஜியம்: ரிதுராஜ் சின்ஹா

கலை சுதந்திரமா? வன்முறை வணிகமா? கேள்விக்குள்ளாகும் லோகேஷ் - அருண் மாதேஸ்வரன்!

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை! அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்!

2026 பொங்கல் பண்டிகை! அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்!!

SCROLL FOR NEXT