புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல் மாற்றம்: முழு அட்டவணை!
14 புறநகர் ரயில்கள் இரு வழித்தடத்திலும் ரத்து.
சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளைமுதல்(நவ. 22) மாற்றம் செய்யவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பராமரிப்பு மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் - செங்கல்பட்டு இடையே வெள்ளிக்கிழமை(நவ. 22) முதல் 14 மின்சார ரயில்கள் இரு வழித்தடத்திலும் ரத்து செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: குறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்த வெள்ளம்!
வார நாள்களில்(திங்கள்கிழமை - சனிக்கிழமை) சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், வார நாள்களில்(திங்கள்கிழமை - சனிக்கிழமை) திருமால்பூர் - காஞ்சிபுரம் - செங்கல்பட்டு - தாம்பரம்- சென்னை கடற்கரை வழித்தடத்தில் இயங்கும் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.