சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு!
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு.
சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
சிக்னல் கோளாறால் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து புறநகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ரயில்வே ஊழியர்கள் தொழில்நுட்ப பாதிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 5 வரை 45 நாள்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The suburban electric train service operating between Chennai Beach and Tambaram has been affected.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.