முகப்பு
சென்னை

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை பாதிப்பு!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 3:28 AM
புறநகர் மின்சார ரயில் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பள்ளி, கல்லூரிக்கு மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

சிக்னல் கோளாறால் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து புறநகர் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ரயில்வே ஊழியர்கள் தொழில்நுட்ப பாதிப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் -செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் இன்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 5 வரை 45 நாள்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The suburban electric train service operating between Chennai Beach and Tambaram has been affected.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments