முகப்பு
தற்போதைய செய்திகள்

கனமழை: சென்னை புறநகர் ரயில் சேவை குறைப்பு

கனமழை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவை தேவைக்கேற்ப குறைப்பு

Updated On : 30 நவம்பர், 2024 at 5:30 AM
புறநகர் ரயில் சேவை - Center-Center-Chennai
பகிர்:

சென்னை புறநகர் ரயில் சேவை குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்படும் என்றும், வழக்கமான ரயில் சேவை குறைக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்ஜால் புயல் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும், வடகடலோர மாவட்டங்களில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் கனமழை காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது

மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

எனவே ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அதற்கேற்றவாறு தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.