கோப்பிலிருந்து.. Din
தற்போதைய செய்திகள்

பழனி கோயிலில் ரோப் கார் சேவை இன்றுமுதல் 40 நாள்களுக்கு நிறுத்தம்!

பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தம்.

DIN

பழனி மலைக் கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி (ரோப்காா்) சேவை வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்றுமுதல்(அக். 7) 40 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிவழிப் பாதை, யானைப் பாதை, மின்இழுவை ரயில், கம்பிவட ஊர்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி வருகின்றனர்.

2 நிமிடங்களில் மலைக் கோயிலின் உச்சியை அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்திக்கு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புள்ளது.

இந்த நிலையில், வருடத்தில் ஒரு மாதம் பராமரிப்புப் பணிகளுக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி, வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்றுமுதல்(அக். 7) 40 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பழனி மலைக் கோயில் அடிவாரத்தில் பக்தர்கள் வசதிக்காக தகவல் மையம், முதலுதவி மையம் நேற்று(அக். 6) திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்! தேர்தல் ஆணையத்துக்கு தவெக ஆலோசனை!

சிறப்பு தீவிர திருத்தம்: குடியுரிமை மீதான தாக்குதல் - திருமாவளவன்

ஷாருக்கான் பிறந்த நாள்: கீங் டீசர்!

வெண்மேகம் பெண்ணாக... ஜென்னி!

அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து- துணை முதல்வர் உதயநிதி

SCROLL FOR NEXT