மகிழ்ச்சி செய்தியை அறிவித்த பிரபல சின்னத்திரை தம்பதி!
கருவுற்று இருப்பதை தெரிவித்த சின்னத்திரை நடிகை நிவேதிதா.
திருமகள் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுரேந்தர் - நிவேதிதா தம்பதியினருக்கு விரைவில் குழந்தைப் பிறக்கவுள்ளது. இதனை சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளனர்.
வாணி ராணி, திருமகள், கல்யாணபரிசு உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் நடிகை நிவேதிதா. இவர் சமீபத்தில் நிறைவடைந்த திருமகள் தொடரில் வில்லி பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.
இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு மகராசி தொடர் நாயகன் ஆர்யனுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக நிவேதிதா - ஆர்யன் பிரிந்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பிக் பாஸ் 8: முதல் நாளே வெளியேறிய போட்டியாளர்?
இதனைத் தொடர்ந்து, திருமகள் தொடரில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, நாயகன் சுரேந்தர் உடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து நிவேதிதா, சுரேந்தர் உடன் காதலில் இருப்பதாக சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் சுரேந்தர் - நிவேதிதாவுக்கு உற்றார் உறவினர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், நடிகை நிவேதிதா தான் கருவுற்று இருப்பதாக இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த சுரேந்தர் - நிவேதிதாவுக்கு, அவர்களடைய ரசிகர்கர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.