வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் கிராமத்தில் விபத்துக்குள்ளான பால் வேன்.  
தற்போதைய செய்திகள்

வாழப்பாடி அருகே பால் வேன் மோதி ரயில்வே ஊழியர் பலி

வாழப்பாடி அருகே பால் வேன் மோதி ரயில்வே ஊழியர் வியாழக்கிழமை பலியானார்.

DIN

வாழப்பாடி: வாழப்பாடி அருகே பால் வேன் மோதி ரயில்வே ஊழியர் வியாழக்கிழமை பலியானார்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த அனுப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி (57). இவர் பெரியகிருஷ்ணாபுரம் ரயில்வேகேட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வியாழக்கிழமை காலை பணி முடிந்ததும், அவரது இருசக்கர வாகனத்தில் வாழப்பாடி வழியாக பேளூர் சாலையில் அனுப்பூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.

வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பேளூர் பகுதியில் இருந்து வாழப்பாடி நோக்கி வந்துகொண்டிருந்த பால் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், விபத்துக்குள்ளான பால் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ரயில்வே ஊழியர் துரைசாமி உடல் நசுங்கினார். அவரை மீட்ட அந்த பகுதி மக்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் பால் வேன் மோதியதில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த விவசாயி ஒருவரும் காயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT