திருப்பட்டினம் அருகே ஏரியில் மீன்பிடித்த போது வலையில் சிக்கிய ஒன்றரை அடி உயரம் கோயில் கோபுர செப்பு கலசம். 
தற்போதைய செய்திகள்

மீன் பிடி வலையில் சிக்கிய ஒன்றரை அடி உயர செப்பு கலசம்

திருப்பட்டினம் அருகே போலகத்தில் உள்ள ஏரியில் மீன்பிடித்த போது வலையில் ஒன்றரை அடி உயரம் கொண்ட கோயில் கோபுர செப்பு கலசம் சிக்கியது.

DIN

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே போலகத்தில் உள்ள ஏரியில் மீன்பிடித்த போது வலையில் ஒன்றரை அடி உயரம் கொண்ட கோயில் கோபுர செப்பு கலசம் சிக்கியது. இது இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அருகே போலகம் புதுகாலனி பகுதியை சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் (54). இவா் அதே பகுதியில் உள்ள சிற்றேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை மீன்பிடிக்க வலையை வீசி இழுத்தபோது, அதில் ஒன்றறை அடி உயரம் கொண்ட கோயில் கோபுர செம்பு கலசம் ஒன்று சிக்கியது.

வலையிலிருந்து அதனை எடுத்துக்கொண்டு திருப்பட்டினம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் முருகனிடம் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், இந்த செம்பு கலசம் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்த தகவல் தெரிந்தோர் திருப்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அலுவலகத்தின் 9489205326, 04368-233480 என்கிற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என போலீஸாா் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT