சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் நோயாளி மற்றும் நோயாளிகளின் உறவினர்களிடம் சிகிச்சை மற்றும் மருத்துவமனை குறித்து கேட்டறிந்த அமைச்சர் மா சுப்பிரமணியம். 
தற்போதைய செய்திகள்

சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு

சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

DIN

சேலம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியம், சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, மருந்து மாத்திரைகள் வழங்கும் இடம் மற்றும் சித்த மருத்துவமனை பிரிவு, சிடி ஸ்கேன் எடுக்கும் அறை, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது சிகிச்சைக்கு வந்திருந்த மக்களிடம் மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததுடன் தொடர்ந்து மருத்துவமனையை சிறந்த முறையில் பராமரித்து பணியாற்றும் வகையில் மருத்துவர்கள் தேவையான அறிவுரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, துணை சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

ஓபிஎஸ், டிடிவி தினகரன் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: அண்ணாமலை

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

யுஎஸ் ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அனிசிமோவா, சபலென்கா!

தொடர் தோல்விகளால் திணறும் இங்கிலாந்து! 2027 உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல்!

SCROLL FOR NEXT