கனமழை: 4 விரைவு ரயில்கள் ரத்து!
சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, 4 விரைவு ரயில்கள் ரத்து.
தற்போதைய செய்திகள்கனமழை: 4 விரைவு ரயில்கள் ரத்து!
சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, 4 விரைவு ரயில்கள் ரத்து.
சென்னையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே நீர் தேங்கியுள்ளதால் 4 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சப்தகிரி, ஏற்காடு, திருப்பதி, காவிரி விரைவு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
இதன்காரணமாக, ரயில் தண்டவாளங்களில் நீர் தேங்கியுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.