தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 30) அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும், பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: அரசியலுக்கு வருவீர்களா? - சிவகார்த்திகேயன் பதில்!
தமிழகத்தில் அக்.31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.