மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் நிலையில், ஆடவருக்கான(எஃப்64) ஈட்டி எறிதல் போட்டியில், இந்தியாவின் சுமித் அண்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
திங்கள்கிழமை(செப். 2) நடைபெற்ற போட்டியில், 70.59 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார் 26 வயதான சுமித் அண்தில். இதன்மூலம், பாராலிம்பிக்ஸ் தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், சுமித் அண்தில்லை வெகுவாகப் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.